செவ்வாய், 13 நவம்பர், 2012

இனிய தீபாவளி...

 
 
 
அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
 
-ILamKavi Designs4you-
 



வெள்ளி, 9 நவம்பர், 2012

நீ தான் வேண்டும்...!


 
கவிதையாய் எனை நினைக்கவேண்டும் ...! - என்
கனவுகளை உன் மூச்சாக
சுவாசிக்கவேண்டும் ...!
கணவனாக நீ வரவேண்டும்...! - உனது
கண்களின் பார்வையாக
நானாக வாழவேண்டும்...!
காதல் நீ தான் என உணர்த்த
வேண்டும்...!
காலம் சாகும்வரை ...!


மண்ணில் காதல் மீன்களே


 
விண்ணில் மின்னும் விண்மீன்களை விட
மண்ணில் எனை தின்னும் - உன்
கண்மீன்களே காதலை வென்றதடி...!


புதன், 7 நவம்பர், 2012

கனாக் கண்டேன் !


மண்மீது நான் பிறக்கையில்
மழலை மொழி மட்டுமே அறிந்தேன்.
மாதங்கள் கடந்து செல்கையில்
மனதில் வார்த்தைகள் தேங்கியதை
மலரான என் இதயத்தில் உணர்ந்தேன்.
கருவொன்று உருவாகிய பின்னே
கவிதையாகிய எனது காதலை ரசித்தேன்.
காதலன் உன்னை கனாக் கண்டேன்...!


செவ்வாய், 6 நவம்பர், 2012

இசை தொடுத்த என் காதல்வரிகள்



இசை கொடுத்த எனது
காதல்வரிகளை உனக்காக
நான் தொடுத்து வைத்தேன்
கவிதைக் காவியமாக ...!
 
உன் கண்களை கண்டால்
கிறங்கிப் போய்விடும் என் வார்த்தைகள் கூட ...!
பார்த்தால் போதும் பறந்துவிடும்
என் மனசு உன் இதயம் தேட ...!



 

பூவின் அழகை


பெண்ணாக நான் பிறந்ததே
பூவின் அழகை பறிக்கவே ...
பார்வையில் நீ தென்பட்டாய்
பெண்மையே உன் சொந்தமானதே ...!

 


நம் மணநாள்



உன்னைச் சந்தித்த
முதல் நாள்
என் ஆயுள்வரை என்னுடன்
உனக்காக சுமப்பேன்...!
நம் மணநாள் நீ
மறந்தால் கூட - நான் 
கல்லறையிலும் அதை மறவேன் ...!


 

திங்கள், 5 நவம்பர், 2012

உன் சுவாசக் காதல் காற்றே ...

 
 
உன் சுவாசக் காதல் காற்றே
என்மீது மோதியதேனோ ?
நீ பார்க்கும் பார்வையொன்றே
என் இதயம் தேடுவதேனோ ?

 
உன் முதல் வார்த்தை மறவேனே
உனது முத்தம் உறவாகிய பின்னும்..!
மழையில் குடையாகி வருவேனே
நீ மெளனம் கொள்ளாதே பெண்னே...!


தொடுதூர நிலவே !


தொடுதூர நிலவே
துணையாக நீ வா...!
உன்மீது தூங்கவே
உனை வரமாக நீ தா...!
 
திங்கள் தோறும்
தீண்டும் உன் பார்வையில்
தூண்டில் போட்டு
தினமும் எனை வீழ்கச் செய்கிறாய்...!



ஜன்னலோரம்...


 
ஜன்னலோரம் நான் நின்றே
உனைக் காதல் செய்து கொண்டேனே...!
மழையே என்மேல் விழும் போதே
முத்தமுத்தமாய் தந்தாயே...!
 
தூரத்தில் உன்னைக் கண்டவுடன்
புன்னகையாய் அள்ளி வீசியதே...!
என்னைத் தூண்டிய உன் பார்வை
என் மனதை இங்கு கொல்லுதே...!

அழகாய் கடந்த நாட்கள் !



அழகாய் கடந்த நாட்களே
அருகில் அணைக்க ஏங்குதே...!
உனக்காய் தவிக்கும் இதயமொன்று
உன் பெயர் சொல்லித் துடிக்குதே...!
 
இருவரும் காதலில் வாழ்ந்த நொடி
தூரத்தில் எங்கோ வாழுதடா...
உன் முகம் மீண்டும் காண்பதற்காய்
உள்ளம் காத்துக் கிடக்குதடா..!

வெள்ளி, 2 நவம்பர், 2012

பெண்ணே !

 
கடல்வானம் நீயானால் 
காதல்மேகம் நானாவேன் 
அட்லாண்டிக் சமுத்திர அழகே 
அலையாக கரை தொடு பெண்ணே 



காதலே ...!



இதயா விழி காண
இதமாய் வீசுதே சுவாசமே ... 
தினம் நிதம் அடி நெஞ்சில் 
துளிர்க்குதே காதலே ...!

Template by:

Free Blog Templates